search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் தற்கொலை"

    • பன்னீர்செல்வத்தை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உறவினர் பாபு என்பவரை கைது செய்தனர்.

    அம்பத்தூர்:

    சென்னை முகப்பேரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஏ.ஆர்.டி. ஜூவல்லரி மற்றும் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது. இந்த வழக்கில் அதன் உரிமையாளர்கள் 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தை சேர்ந்த டிரைவர் பன்னீர்செல்வம் (50) என்பவர், அவரது உறவினர்கள் உள்பட பலரிடம் மொத்தமாக ரூ.1 கோடி வரை வசூல் செய்து, ஏ.ஆர்.டி. நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ஏ.ஆர்.டி. நிறுவனம் மோசடியில் ஈடுபட்ட தகவலறிந்ததும் பணம் கொடுத்த உறவினர்கள், பன்னீர் செல்வத்தை தகாதவார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்து, பணத்தை திருப்பி தருமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பன்னீர்செல்வம் நேற்று மாலை தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில், பன்னீர்செல்வத்தை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.

    பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் பலர் போலீஸ் நிலையத்தில் ஒன்று கூடியதால் தற்போது அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இது குறித்து அம்பத்தூர் போலீஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உறவினர் பாபு என்பவரை கைது செய்தனர்.

    • போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த புலியூர் நியூ காலனியை சேர்ந்தவர் பிரபு (வயது.33) ஆட்டோ டிரைவர். புலியூர் தைலமர காட்டு பகுதியில் மரத்தில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருக்கழுக்குன்றம் போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரபுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர், சைதாப்பேட்டை, சுருட்டுக்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 25). ஆட்டோ டிரைவர்.

    மதுவுக்கு அடிமையான வெங்கடேசன் தினமும் மது போதையில் வந்து அவரது மனைவியிடம் சண்டையிட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவரது மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    வெங்கடேசன் மாமியார் வீட்டிற்கு சென்று பலமுறை குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்தார். அவர் வர மறுத்ததால் விரக்தியில் இருந்த வெங்கடேசன் நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனவேதனை அடைந்த சுகுமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கே.கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை கே.கே நகர், அடுத்த ராணி அண்ணா நகர் குடியிருப்பை சேர்ந்தவர் சுகுமார். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மணிமேகலை. கணவருடன் ஏற்பட்ட குடும்பத்தகராறில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிமேகலை தனது மகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதனால் மனவேதனை அடைந்த சுகுமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கே.கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிகண்டன் தனியார் தொலைக்காட்சியில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
    • திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் ராஜா கிராமணி தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன். 48 வயதான இவர் தனியார் தொலைக்காட்சியில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் மணிகண்டன் நேற்று இரவு சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றம் எதிரில் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக அவர் தனது செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்தும் வீடியோ வெளியிட்டும் தகவல் தெரிவித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டனின் மனைவி அளித்த தகவலின் பேரில் பத்திரிகையாளர் மன்றத்தில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோதுதான் மணிகண்டன் தூக்கில் தொங்கி உயிரை விட்டது தெரிய வந்தது.

    இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மணிகண்டன் சக ஊழியர் திட்டியதால் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    • சிவக்குமார் கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார்.
    • வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த தனலட்சுமி, சிவக்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து கதறி துடித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி அருகே மாரப்பம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47). இவரது மனைவி புவனேஸ்வரி (42).

    சிவக்குமார் சென்னையில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். அதன் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் குணம் ஆகாததால் மாரப்பம்பாளையம் புதூரில் உள்ள தனது தாய் தனலட்சுமி வீட்டிற்கு வந்த சிவக்குமார், வீட்டில் யாரும் இல்லாதபோது, வீட்டு மேற்கூரையின் இரும்புக் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த தனலட்சுமி, சிவக்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து கதறி துடித்தார். இதுபற்றி ஜேடர்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீண்டும் தகராறு ஏற்பட்டதால் விரக்தியில் இருந்த ராஜ்குமார் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
    • சிகிச்சை பெற்று வந்த ராஜகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    காரிமங்கலம், மே.19-

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தும்பலஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (37). லாரி டிரைவர். இவரது மனைவி சிந்தினி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் விரக்தியில் இருந்த ராஜ்குமார் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குடும்ப தகராரில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சலவன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 29) குடிநீர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக இன்று அதிகாலை சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சின்ன வட்டார பகுதியில் உள்ள ஒரு பெண்ணை ஒன்றரை வருடமாக காதலித்து வந்துள்ளார்.
    • நேற்று சின்ன வட்டாரப்பகுதி ரைஸ் மில் அருகே உள்ள மாந்தோப்பில் காசிராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மணத்தூர் பகுதியை சேர்ந்தவர் காசிராஜா (வயது24). லாரி டிரைவரான இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே சின்ன வட்டாரப்பள்ளி பகுதியில் குடியிருந்து வந்தார்.

    இவர் சின்ன வட்டார பகுதியில் உள்ள ஒரு பெண்ணை ஒன்றரை வருடமாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் காசிராஜா மனமுடைந்து காணப்பட்டார்.

    இதனால் நேற்று சின்ன வட்டாரப்பகுதி ரைஸ் மில் அருகே உள்ள மாந்தோப்பில் காசிராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராமச்சந்திரன் கடந்த 3 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
    • பெண்ணுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு வாலிபருடன் திருமணமாகிவிட்டது.

    சாம்பவர்வடகரை:

    தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை சின்ன வைரவன் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ராமச்சந்திரன்(வயது 26). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ராமச்சந்திரன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர்.

    இதற்கிடையே தென்காசி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே ராமச்சந்திரனின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தது ராமச்சந்திரன் என்பது உறுதியானது.

    தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று ராமச்சந்திரன் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ராமச்சந்திரன் கடந்த 3 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு வாலிபருடன் திருமணமாகிவிட்டது.

    இதனால் ராமச்சந்திரன் மிகவும் சோகத்துடன் இருந்துள்ளார். யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வந்த அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்பது தெரியவந்தது.

    • பழனிசாமி மின் விசிறியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    பெருந்துறை அருகே உள்ள திங்களூர் அடுத்த திருக்கு பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 46). இவருக்கு திரு மணமாகி அன்னக்கொடி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர்.

    இவர் குடித்து விட்டு வந்து அடிக்கடி மனைவி யிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி கஷ்டப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத் தன்று பழனிசாமி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவ ர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து பழனிசாமியின் மனைவி அன்னக்கொடி கோபித்து கொண்டு மகள்க ளுடன் அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் பழனிசாமியின் வீடு பூட்டி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்தார். வீடு உள் பக்கமாக மூடி இருந்தது.

    வீட்டிக் கதவை தள்ளி திறந்து பார்த்த போது அங்கு பழனிசாமி மின் விசிறியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராஜேந்திரன் வீட்டில்யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார்.
    • இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள குள்ளம் பாளையம் பகுதியை சேர்ந்த வர் ராஜேந்திரன் (வயது 56). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் அந்த கம்பெனிக்கு வேலை க்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் பல்வேறு இடங்களில் அவர் வேலை தேடி பார்த்தும் எந்த வேலையும் கிடைக்க வில்லை.

    இதை தொடர்ந்து வீட்டில் இருந்து வந்த ராஜே ந்திரன் வேலை இல்லாததால் மனவேதனை அடைந்தார்.

    இந்த நிலையில் ராஜேந்திரன் வீட்டில்யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×